இறந்தவர்கள் உடலுடன் வீட்டில் வசிக்கும் உறவினர்கள்! எங்கு பார்த்தாலும் மரண ஓலம்: ஒரு அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய இடமில்லாததால் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் வசிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின்டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் மரண ஓலம் எழுந்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அங்கு உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 நோயாளிகள் வரை இறப்பதால் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்காமல் நீண்ட வரிசையில் உறவினர்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதனால் உடல்களை ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் முன்பு தகனம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் சமீபத்தில் நிதீஷ் குமார் என்பவரது தாய் கொரோனா நோயால் இறந்துள்ளார். அவரது உடலை தகனம் செய்ய இடமில்லாமல் இரண்டு நாட்களாக தாயின் சடலத்தை தனது வீட்டில் வைத்திருந்த சோக சம்பவம் நாட்டு மக்களை கண்ணீரில் ஆழ்த்தியது.
இதே போல மேலும் சில இடங்களில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், சில அதிகாரிகள் டெல்லியில் ஏற்பட்டுள்ள சூழலை வெளிப்படையாக சொல்ல மறுப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.