காதலி உடலை ஃப்ரிட்ஜில் அடைத்துவிட்டு, சில மணிநேரங்களில் வேறு பெண்ணுடன் திருமணம்
டெல்லியில் 24 வயது இளைஞன் தனது காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை தனது தாபாவின் குளிர்சாதன பெட்டியில் அடைத்துவிட்டு, அதே நாளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டெல்லி ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு
டெல்லி ஃப்ரிட்ஜ் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல உண்மைகள் வெளிவருகின்றன.
NDTV
தென்மேற்கு டெல்லியில் உள்ள மித்ரான் கிராமத்தில் வசிக்கும் சாஹில் கெலாட் (24), வீட்டில் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக, தனது காதலி நிக்கி யாதவை கொலை செய்து, சுடலைத்தை ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் காதலர் தினத்தன்று காலை, பெண்ணின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதையடுத்து வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, சாஹில் கெலாட் கைது செய்யப்பட்டு 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொலை செய்த அதே நாளில் வேறு பெண்ணுடன் திருமணம்
பிப்ரவரி 10-ஆம் திகதி, சாஹில் கெலாட் தனது காதலியைக் கொன்றுவிட்டு, கொலை செய்யப்பட்ட அதே நாளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சென்றதாக தெரியவந்தது.
NDTV
விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, 2018 ஜனவரியில் இருவரும் தினமும் ஒரே பேருந்தில் அவரவர் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும்போது நண்பர்களாகி பின்னர் காதலித்து வந்தனர்.
2018 பிப்ரவரியில், சாஹில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் டிபார்மாவில் சேர்க்கை பெற்றார், மேலும் அவரது காதலி நீக்கியும் அதே கல்லூரியில் பிஏ (ஆங்கில ஆனர்ஸ்) சேர்க்கை பெற்றார்.
அதன்பிறகு, இருவரும் கிரேட்டர் நொய்டாவில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கி ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாகிவிட்டனர். மணாலி, ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் டேராடூன் போன்ற பல இடங்களுக்கும் அவர்கள் பயணம் செய்தனர்.
கோவிட் ஊரடங்கின்போது, அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர், ஊரடங்கு முடிந்ததும், அவர்கள் மீண்டும் துவாரகா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருடனான இந்த உறவைப் பற்றி அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவில்லை.
வேறொரு பெண்ணுடன் நிச்சயம்
அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தி, இறுதியாக 2022 டிசம்பரில் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் பிப்ரவரி 9 மற்றும் 10-ஆம் திகதிகளில் மற்றொரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டது.
சாஹில் தன்னை ஏமாற்றுவதை அறிந்துகொண்ட நிக்கி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோது, இருவருக்கும் இடையில் சண்டை வெடித்து, கொலை வரை சென்றது.