தீப்பற்றி எரிந்த கட்டிடம்! உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்.. ஜன்னல் வழியே குதித்த பெண்களின் பதறவைக்கும் வீடியோ
டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததில் 27 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சோகமான சம்பவம் தொடர்பில் பல புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 பேர் காயமடைந்தனர்.
கட்டிடத்தின் உள்ளே இருந்த மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர்.
Deadly blaze in Delhi's #Mundka. People jump from building to escape fire. @TejshreeThought joins in with more details. #ITVideo #MundkaFire pic.twitter.com/mYy8SNxQCM
— IndiaToday (@IndiaToday) May 14, 2022
அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கட்டடம் முழுவதும் இன்னும் சோதனை செய்யப்படவில்லை. எனவே உயிரிழப்பு அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதாக பொலிசார் கவலை தெரிவித்தனர்.
சிசிடிவி கேமரா மற்றும் இன்டர்நெட் ரெளட்டர் தயாரிக்கும் கம்பெனி தீப்பிடித்த கட்டடத்தில் இயங்கிவந்ததாக பொலிஸ் அதிகாரி சர்மா தெரிவித்தார். கம்பெனி உரிமையாளரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்
தீவிபத்து எங்கு ஏற்பட்டது? மாலை 4.30 மணியளவில் கட்டிடத்தின் முதல் மாடியில் தான் முதலில் தீப்பிடிக்க தொடங்கியது, இதை பார்த்த எல்லாரும் அலற தொடங்கினர்.
தப்பிக்க, மக்கள் ஜன்னல்களை உடைத்து, கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இருந்து கயிறுகளின் உதவியுடன் குதிக்கத் தொடங்கினர். 6.30 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்தது. நள்ளிரவு 2 மணிக்கு தீ முழுமையாக தீயணைப்பு துறையினரால் அணைக்கப்பட்டது.