ரகசிய அறையில் கோடிக்கணக்கான பணம்! அவள் கண்ட காட்சி.. கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என கூறப்பட்ட இளம்பெண் வழக்கில் தலைசுற்றவைக்கும் திருப்பம்
இந்தியாவை உலுக்கிய இளம்பெண் காவலர் ராபியா சைஃபி கொல்லப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி சங்க விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ராபியா சைஃபி (21). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த மாதம் 27-ம் திகதி பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று கொலை செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் ராபியாவின் உடலை மீட்டனர். அப்போது அவரது உடல் மிகக் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவரை குறைந்தது 4 நபர்களாவது கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. அவர் உடலில் குறைந்தபட்சம் உடலில் 50-க்கும் மேற்பட்ட கத்தி குத்துகள் உள்ளன. உடல் கிழிக்கப்பட்டுள்ளது. மார்பகங்கள் வெட்டப்பட்டுள்ளன.
பெண்ணுறுப்பு மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தின் அன்று ராபியா வீட்டுக்கு வராததால் குடும்பத்தார் இரவு 10 மணி அளவில், ராபியாவின் அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, ஒரு வழக்கு சம்பந்தமாக, ராபியா உயரதிகாரியுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஆறுதல் கூறியுள்ளார்.
இதனால், நிம்மதியடைந்த குடும்பத்தினர், ராபியா வந்துவிடுவார் எனக் காத்திருந்துள்ளனர். ஆனால், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த இரண்டு பொலிசார் ராபியாவின் உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுள்ளனர். ஒரு கணம் என்ன நடந்தது எனப் பிடிபடாமல் இருந்த அவரின் பெற்றோர், பின்னர் கதறித் துடித்து அழுதுள்ளனர். என்ன நடந்தது? ராபியாவுக்கு என்ன ஆனது? எனத் தெரியாமல் அடையாளம் காட்டச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
ராபியாவின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில், ராபியா வன்புணர்வு செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், சபியாவின் அண்ணன் மோனிஸ் சைஃபி வெளியிட்ட காணொளிப் பதிவில், என் தங்கையின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவளின் வாய் வழியாகச் சென்ற கத்தி கழுத்து வழியாக வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. அவளின் மார்பகங்கள் அறுத்து வீசப்பட்டிருக்கின்றன. என் தங்கச்சியைப் பற்றி நானே இப்படிச் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே.
கடவுளே என்னை மன்னித்துவிடு எனக் கலங்கினார். இந்த நிலையில் ராபியாவை நான் தான் கொன்றேன் என நிஜாமுதீன் (25) என்பவர் பொலிசில் கூறினார். அப்போது ராபியாவும் நானும் காதலித்து வந்தோம். சமீபத்தில், வீட்டுக்குத் தெரியாமல், திருமணமும் செய்துகொண்டோம் எனக் கூறினான்.
மேலும், மனைவி நடத்தை மீது சந்தேகம் வந்ததால் அவரை கொன்றேன் என கூறினார். ஆனால் ராபியாவுக்கு திருமணமே ஆகவில்லை என அவர் குடும்பத்தார் கூறுகின்றனர். மேலும் பொலிசார் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது. இது திட்டமிட்ட கொலை. எங்கள் மகளை நான்குக்கும் மேற்பட்டவர்கள் வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர். திருமணம் செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். எங்கள் மகள் ஒருபோதும் அப்படிச் செய்பவள் அல்ல.
நிஜாமுதீனுக்கும் சபியாவுக்கும் திருமணம் ஆனதாகக் கூறும் காவல்துறை, அது சம்பந்தமான ஆவணத்தை இதுவரை வெளியிடவில்லை. ஒருவேளை திருமணம் நடந்தது உண்மை என்றால் கூட, காதலித்த பெண்ணின் மார்பை அறுக்கும் அளவுக்கா ஒருவன் துணிவான் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராபியாவின் தந்தை கூறுகையில், என் மகள் ஒருமுறை, தான் பணியாற்றும் அலுவலகத்தில், ஒரு ரகசிய அறை இருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இப்படி, அந்த அறைக்கு லஞ்சப் பணமாக தினமும் 4 லட்சம் வரை வரும் காட்சியை தான் கண்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில்தான், அவர் மர்மமான முறையில் இறந்துபோயுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
திருமண உறவு, ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் ரகசியப் பணவறை, காவல்துறையின் அலட்சியம் போன்றவை இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.