டெல்லியில் பயங்கரம்! நீதிமன்றத்திற்குள் வைத்து பிரபல ரவுடி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை: கமெராவில் சிக்கிய பரபரப்பு வீடியோ
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்திற்குள் வைத்து பிரபல ரவுடி உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்திற்குள்ளே இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறையில் உள்ள ஜிதேந்தர் கோகியின் எதிரி ரவுடி சுனிலின் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆயுதமேந்திய நபர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் வழக்கறிஞர்கள் உடையில் வந்த தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் டெல்லி பொலிசாரால் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Rohini Shootout - #rohinishootout pic.twitter.com/AdjL89NIhk
— Bar & Bench (@barandbench) September 24, 2021
டெல்லி நீதிமன்றத்திற்குள் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது தலைநகரின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.