40 சதவீதம் அதிகமாக பரவும் டெல்டா! பிரித்தானியாவை உலுக்கும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு: சுகாதார செயலாளர் பரபரப்பு தகவல்
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுாபடு, பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட கென்ட் மாறுாபாட்டை விட 40 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாறுபாடு கென்ட் மாறுபாட்டை விட 40% அதிகமாக பரவக்கூடியது என சமீபத்தில் விஞ்ஞான குழு பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாக மாட் ஹான்காக் குறிப்பிட்டார்.
இதனால் புதிய டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஜூன் 21 அன்று பிரித்தானியாவில் அனைத்து கொரோனா கட்டுபாடுகளையும் தளர்த்துவதும் மிக கடினம் என குறிப்பிட்டார்.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது பரவலாக உள்ளது. மருத்துவமனைகளில் உள்ளவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடாதவர்கள்.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையிலே தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.
ஜூன் 21 அன்று கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தற்போது ஏதுவும் செல்ல முடியாது.
மேலும் ஒரு வாரம் நாட்டில் பதிவாகும் தொற்று எண்ணிக்கை, மருத்துவமனைகளில் அனுமதிப்பவர்கள் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணித்து முடிவெடுக்கப்படும் என மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.