பிரித்தானியாவில் உச்சத்தை தொட்ட டெல்டா மாறுபாடு! தொற்று ஒரு வாரத்தில் பல மடங்கு அதிகரிப்பு
பிரித்தானியாவில் இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் டெல்டா மாறுபாட்டால் மொத்தம் 75,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன என இங்கிலாந்து பொது சுகாதாரம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய வாரத்தில் பதிவானதை விட 33,630 அல்லது 79 சதவீதம் அதிகம் என இங்கிலாந்து பொது சுகாதாரம் குறிப்பிட்டுள்ளது.
75,953 பேரில், 70,856 பேர் இங்கிலாந்திலும், 4,659 ஸ்காட்லாந்திலும், 254 வடக்கு அயர்லாந்திலும், 184 வேல்ஸிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிககையில் 99 சதவீதம் டெல்டா மாறுபாடு என்று மிக சமீபத்திய தகவல்கள் காட்டுகின்றன.
டெல்டா மாறுபாடு அதிகரிப்பால் ஜூன் 21 அன்று பிரித்தானியாவில் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்த திட்டமிடப்பட்டிருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை ஜூலை 19 வரை நீட்டிப்பது குறித்து ஒரு வாரத்தில் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.