தீவிரமடையும் 4வது அலை... பிரான்ஸ் நிலை குறித்து பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரான்ஸில் கொரோனாவின் 4வது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டின் நிலைமை குறித்து அந்நாட்டு பிரதமர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரான்சில் கொரோனாவை கட்டுப்படுத்த ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உணவகங்கள், மால்கள் மற்றும் ஈபிள் டவர் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய இந்த ஹெல்த் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதாவது, தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம், தொற்று இல்லை என்ற சோதனை முடிவு அல்லது தொற்றிலிருந்து மீண்டதற்கான ஆதாரங்கள் ஹெல்த் பாஸ் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு இப்போது பிரான்சில் பரவும் வைரஸின் பெரும்பான்மையான மாறுபாடாகும் என்று பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.
நாட்டில் நான்காவது அலை நோய்த்தொற்றுகளைச் சமாளிக்க எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தால் தீர்மானிக்கப்படும் என்று Jean Castex தெரிவித்தார்.
பிரான்ஸ் தற்போது கொரோனாவின் நான்காவது அலையில் இருக்கிறது.
தற்போது பிரான்சில் பொரும்பாலானோர் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது மிகவும் தீவிரமானது என Jean Castex கூறினார்.