பிரித்தானியாவில் இந்த வகை கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவுவது! எப்படி தப்பிக்கலாம்? ஆய்வில் தெரியவந்த உண்மை தகவல்
பிரித்தானியாவில் ஆல்பா வைரஸைவிட டெல்டா வைரஸ், தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பிரித்தானியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல், இப்போது மீண்டும் தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய டெல்டா என்ற கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் பிரித்தானியாவில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவதாகக் கண்டறியப்பட்டதாக அறியப்படும் டெல்டா வைரஸ் பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த ஆல்பா வைரஸைவிட மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறது.
இதுகுறித்து ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்டார்ச்லைட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்காட்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 134 பேர் டெல்டா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த ஆல்பா வைரஸைவிட டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இது தீவிரமாக பரவும் தன்மை உடையது. இருப்பினும், நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் இதனைத் தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸை எடுத்துக்கொண்டோ அல்லது ஒரு டோஸை எடுத்துக்கொண்டு 28 நாட்களைக் கடந்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைத் தடுப்பூசிகள் 70 சதவீதம் தடுக்கின்றன.
பைஸர் 79 சதவீதமும், கோவிஷீல்ட் 60 சதவீதமும் டெல்டா வைரஸுக்கு எதிராக எதிர்ப்பாற்றலைத் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.