ஜேர்மனியில் ரஷ்யர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்: விவரம் செய்திக்குள்...
ஜேர்மனி உக்ரைனுக்கு ஆதரவளிப்பதற்கெதிராக ஜேர்மனி வாழ் ரஷ்யர்கள் பேரணி.
அதே நாளில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஒரு கூட்டம் எதிர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.
எங்கு வாழ்ந்தாலும் ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களை மட்டும் பார்த்து ரஷ்ய அரசு சொல்வதை அப்படியே நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வகையில், உக்ரைனுக்கு ஆதரவு தருவதை நிறுத்தக் கோரியும், ரஷ்யா மீதான தடைகளை கைவிடக் கோரியும், ஜேர்மனியில் வாழும் ரஷ்யர்களில் சுமார் 2,000 பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஜேர்மனியிலுள்ள Cologne நகரில் கடந்த ஞாயிறன்று இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஜேர்மனி குழப்பத்தில் இருக்கிறது என்கிறார் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான Elena Kolbasnikova. அதாவது, இதே வார்த்தைகளைத்தான் ரஷ்ய ஜனாதிபதி புடின் அரசு தொலைக்காட்சியில் கூறிவருகிறார்.
Image: Reuters
மேலும், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் போராடும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு உதவுவதற்காக நன்கொடைகளும் சேகரிக்கிறார்கள்.
ஒருபக்கம் ரஷ்யாவின் பொய்களை நம்பி ஜேர்மனியில் வாழும் ரஷ்யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதே நேரத்தில், அவர்களுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டத்தாரும் அதே நகரத்தில் எதிர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.
ஜேர்மனியில் ரஷ்ய பின்னணிகொண்ட 3 மில்லியன் பேர் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.