குழந்தைகளை பாதிக்கும் டெங்கு காய்ச்சல்! எப்படி தடுக்கலாம்?
மழைக்காலங்களில் கொசு தொல்லையுடன் டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீராகாரங்களை கொடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெற முடியும்.
அந்தவகையில் டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Representational Image: ANI
உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக் சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன.
ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக்குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த் தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட்டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.
காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
- வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?
- ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக்கரைசல்
- இளநீர்
- பழச்சாறுகள்
- பால்
- கஞ்சி
- திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.