லண்டனில் இந்திய வம்சாவளி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு
இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் லண்டனில் நிரந்தர முகவரி இல்லாத ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார்.
அவரது விசாரணை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் மனோதத்துவம் பயில வந்த இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் நிரந்தர முகவரி இல்லாத ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார்.
இந்திய வம்சாவளி இளம்பெண்ணான சபீதா (Sabita Thanwani, 19), Clerkenwell என்ற இடத்திலுள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கி பல்கலையில் பயின்றுவந்தார்.
மார்ச் மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 5.10 மணியளவில் சபீதா கூக்குரலிடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவர, சபீதாவின் அறையிலிருந்து வெளியே ஓடிவந்த இளைஞர் ஒருவர் வேறொரு அறைக்குள் நுழைய முயன்று, பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
Image: Met Police
அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட, மருத்துவ உதவிக்குழுவினர் சபீதாவைக் காப்பாற்ற முயன்றும் பலனின்றி காலை 6.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.
பொலிசார் கொலையாளியைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், தோட்டம் ஒன்றிலிருந்த ஷெட் ஒன்றில், தார்பாலினுக்குள் தூங்கிக்கொண்டிருந்த Maher Maaroufe (23) என்னும் நபர் சிக்கினார்.
பொலிசார் அவரைக் கைது செய்ய முயலும்போது, Maher, அவசர உதவிக்குழுவினர் ஒருவரையும், பொலிசார் ஒருவரையும் தாக்கியுள்ளார்.
அவர் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி அவர் மீதான விசாரணை துவங்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Image: PA Wire/PA Images