ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தலை விரைவுபடுத்தவேண்டும்... அமைச்சர் விருப்பம்: பின்னணி
குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அதிவிரைவாக நாடுகடத்தவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் உள்துறை அமைச்சர்.
நாடுகடத்தலை விரைவுபடுத்தவேண்டும்
குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அதிவிரைவாக நாடுகடத்தவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் (Nancy Faeser).
வெளிநாட்டுக் குற்றவாளிகள் ஜேர்மனியை விட்டு மேலும் அதிவிரைவில் வெளியேறவேண்டும் என்று கூறியுள்ள நான்சி, நாம் உருவாக்கியுள்ள கடுமையான நாடுகடத்தல் விதிகளை அமுல்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்றார்.
REUTERS/Lisi Niesner
கடந்த ஆண்டில் கொடும் வன்முறைக்குற்றங்கள் 8.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை சகித்துக்கொள்ள முடியாது என்றும், விதிகளை ஒழுங்காக பின்பற்றாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறியாகவேண்டும் என்றார்.
புள்ளிவிவரங்கள்
ஜேர்மனியில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஜேர்மானியர் அல்லாதோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜேர்மனியில் கடந்த ஆண்டில் குற்றச்செயல்கள் 5.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள தரவுகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் வெளிநாட்டுப் பின்னணி கொண்டவர்கள் என கருதப்படுவோரின் எண்ணிக்கை 13.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
ஆகவே, குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அதிவிரைவாக நாடுகடத்தவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |