ஜேர்மனியிலிருந்து இந்த நாட்டுக்கு நாடுகடத்தல் நிறுத்திவைப்பு: விவரம் செய்திக்குள்...
ஈரானியர்கள் ஜேர்மனியிலிருந்து ஈரான் நாட்டுக்கு நாடுகடத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது ஜேர்மனி.
ஹிஜாப் அணியாததற்காக Mahsa Amini என்ற பெண் கொல்லப்பட்ட விடயம் அந்நாட்டில் அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு நாடுகடத்துவது முறையாக இருக்காது என ஜேர்மனி கருதுகிறது.
ஜேர்மனியிலிருந்து ஈரான் நாட்டுக்கு நாடுகடத்தலை நிறுத்திவைத்துள்ளது அந்நாடு.
இப்போதைய சூழலில் ஈரானுக்கு யாரையும் நாடு கடத்தவேண்டாம் என ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser வலியுறுத்தியுள்ளார்.
ஹிஜாப் அணியாததற்காக Mahsa Amini என்ற பெண் கொல்லப்பட்ட விடயம், உலகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மக்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
Photo: picture alliance/dpa | Wolfgang Kumm
ஈரானில் மனித உரிமைகள் மோசமான நிலையில் காணப்படும் நிலையில், அங்கு யாரையும் நாடுகடத்துவது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser.
ஆகவே, நாடுகடத்தல்களை தற்காலிகமாக நிறுத்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ள Nancy, இந்த விடயம் மாகாணங்கள் மட்டத்திலும் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஜேர்மனியில் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.