ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது ஜேர்மனி அரசு.
நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு
2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை, நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக, சனிக்கிழமையன்று ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சுமார் 7,861 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 27% அதிகமாகும். நாடுகடத்தப்பட்டவர்களில் 1,664 பேர் பெண்கள், 1,375 பேர் சிறுவர்களாவர்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது விசாக்கள் அல்லது குடியிருப்பு அனுமதி காலாவதியானவர்கள் சட்டப்படி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |