தங்கள் திருமணம் செல்லாது என அறிவிக்க கோரி நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மனு
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.
2004ஆம் ஆண்டில் பிரபல நடிகர் தனுஷும், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்தனர்.
இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் 2022ஆம் ஆண்டும் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து முடிவை அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்ககோரி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |