நடிகையுடன் தொடர்பு? இவரெல்லாம் திருந்தவே மாட்டாரு.. தனுஷை திட்டிய ஐஸ்வர்யா
விவாகரத்து பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க, பிரபல நடிகைக்கு தனுஷ் உதவி செய்வதாக வெளியான தகவலால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
18 ஆண்டுகால திருமண வாழ்வை முறித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தனர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்.
இந்த தகவல் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினர் பலருக்கு பேரடியாக அமைந்தது, இவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க குடும்பங்கள் பாடுபட்டு வரும் நிலையில், தற்போது தான் நிம்மதியாக இருக்கிறேன், இனி ஒன்று சேரும் வாய்ப்பே இல்லை என தெரிவித்து விட்டாராம் தனுஷ்.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்தே தனுஷ் குடும்பத்தில் பிரச்சனை வெடித்ததாக தெரிகிறது.
தனக்கு பிடித்த நடிகைகளுடன் ஜோடி போட்டுக் கொள்வது, தனக்கு பிடித்தவர்களை வைத்து படம் தயாரிப்பது என தனுஷின் வேலைகள் தொடரை நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதாம்.
கடனாளியான தனுஷுக்கு சம்பளமே வாங்காமால் காலா படத்தை ரஜினிகாந்த் நடித்துக்கொடுத்தும், தனுஷ் நடிகைகளுடன் பேசி வந்ததாக தெரிகிறது.
ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா சென்றபோதுகூட, தனுஷ்க்கு சில அழைப்புகள் வந்துள்ளது, அப்போது ஐஸ்வர்யா எடுத்துப்பேச அழைப்பு துண்டித்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழ விவாகரத்து அறிவிப்பில் வந்து முடிந்துள்ளது, இந்நிலையில் தற்போதும் அந்த நடிகை தனக்கு உதவி செய்யுமாறு தனுஷை வற்புறுத்தி வருகிறாராம்.
இந்த நேரத்தில் சேர்ந்து நடித்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால், தனக்கு தெரிந்த நபர்களிடம் சிபாரிசு செய்து வருகிறாராம் தனுஷ்.
இந்த தகவல் ஐஸ்வர்யாவின் காதுகளுக்கு எட்ட, இன்னும் இவர் திருந்தவே இல்லையா? என கடும் கோபத்தில் திட்டித்தீர்த்து விட்டதாக தெரிகிறது.