நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து முடிவை கைவிடுகின்றனர்! ரஜினி வீட்டில் நடந்த சமரச பேச்சுவார்த்தை
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி தங்கள் விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் வீட்டில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.