ஐஸ்வர்யாவை பிரிய காரணமான அதே செயலை மீண்டும் செய்யும் தனுஷ்! இது நல்லதல்ல என கூறும் நலம்விரும்பிகள்
ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிய காரணமாக இருந்த அதே செயலை தொடர்ந்து அவர் செய்து வருவது நல்லது கிடையாது என அவர் நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷும், அவர் மனைவி ஐஸ்வர்யாவும் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தனர். முன்னதாக இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது தனுஷ் குறித்து அவரின் நெருங்கிய நண்பரான பிரபல நடிகர் சில முக்கிய தகவல்களை கூறியிருந்தார்.
அதன்படி தனுஷுக்கு தனது பணியை செய்வது மிகவும் பிடிக்கும். அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் அதிக பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இது அவர் குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியது.
ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் தனுஷ் புதுப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். அப்படியாவது கவனத்தை திசை திருப்புவார். இதுவும் பிரச்சனை பெரிதாக காரணம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகும் அதையே தான் செய்கிறார். அதாவது புதுப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். ஏற்கனவே கை நிறைய படங்கள் வைத்திருக்கும் தனுஷ் தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பிரச்சனையை எதிர்கொண்டு அதை தீர்க்க முயற்சி செய்யாமல் தனுஷ் தன் கவனத்தை படங்கள் பக்கம் திருப்புவது நல்லதுக்கு இல்லை என்கிறார்கள் நலம்விரும்பிகள்.
இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தாரும், நண்பர்களும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017