தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு! குழந்தைகள் யாரிடம் இருப்பார்கள்? வெளியான முக்கிய தகவல்
பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களின் குழந்தைகள் யார் கஷ்டடியில் இருப்பார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஆன ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 15 மற்றும் 11 வயதில் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த ஜோடி சில தினங்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது.
இதற்கிடையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இது ஒரு சிறிய பிரச்சனை தான், விவாகரத்து எல்லாம் செய்யமாட்டார்கள், விரைவில் இது தீர்த்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அப்படி இருவரும் விவாகரத்து பெற்றால், இவர்களின் குழந்தைகள் யார் கஷ்டடியில் இருக்கும் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது.
இது குறித்து குடும்ப நல வழக்கறிஞர்கள் சிலர் கூறுகையில், இந்தியாவில் குழந்தைகள் மீதான கஸ்டடி உரிமை அம்மா, அப்பா இருவருக்கும் சமமாகவே உள்ளது. குழந்தை மீதான கஸ்டடி ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது என்றால் இன்னொருவருக்கு தன் குழந்தை மீது எந்த உரிமையும் இல்லை என்று கூற முடியாது.
அவரும் ஒரு பெற்றோர்தான். மாறாக அந்த குழந்தையை அவ்வப்போது சென்று சந்திக்கும், நேரம் செலவிடும் உரிமை மட்டும் அளிக்கப்படும். கஸ்டடி எடுக்கும் அம்மாவோ, அப்பாவோ அந்த குழந்தைக்கு ஆதரவாக அறிவிக்கப்படுவார்கள்.
கஸ்டடி கிடைக்காத அம்மாவிற்கோ, அப்பாவிற்கோ குழந்தையை பார்க்கும் உரிமை மட்டும் அளிக்கப்படும். இதற்கு முன்பு நடந்த விவாகரத்து வழக்குகளில் இந்த குழந்தைகள் கஷ்டடி விஷயத்தில், அம்மாவிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் 9 வயதிற்கு கீழ் இருந்தால் அவர்கள் அம்மாவின் கஷ்டடியில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒருவேளை அந்த குழந்தைக்கு வயது 9 வயதிற்கு மேல் ஆகியிருந்தால், குழந்தைகளிடம் கருத்து கேட்கப்படும்.
அவர்கள் யாரிடம் செல்ல விரும்பப்படுகிறார்களோ அவர்களிடம் அனுப்பி வைக்கப்படும். அதே சமயம் அம்மா குழந்தைகள் வளர்க்க தகுதியில்லாதவர்,அதாவது Abusive கொண்டவராக இருந்தால், அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படாது.
அதே போன்று தான் அப்பாவிற்கும், இறுதியில் குழந்தை யார் கஷ்டடியில் இருக்கபோகிறார்கள் என்பது முடிவு செய்த பின்னரே பராமரிப்பு செலவை எப்படி பிரித்து கொள்வது என்பது அறிவிக்கப்படும்.
தற்போது தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி குழந்தைகள் இருவருக்குமே 9 வயதை தாண்டிவிட்டதால், குழந்தைகள் கஷ்டடி விஷயத்தில், அவர்களிடம் கருத்து கேட்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022