இறப்பு விகிதம் பயத்தை ஏற்படுத்துகிறது...நிலைமை கையை மீறி செல்கிறது! உடனே.. அரசுக்கு திமுக எம்.பி முக்கிய கோரிக்கை
கொரோனா தொற்று இந்தியாவை மட்டுமின்றி தமிழகத்தையும் உலுக்கி வரும் நிலையில், தர்மபுரியை ரெட் அலர்ட் மாவாட்டமாக அறிவிக்க வேண்டும் என தர்மபுரி திமுக எம்.பி செந்திகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, தர்மபுரி ‘ரெட் அலர்ட்’ மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும், மேலும் முழுமையான கடுமையான ஊரடங்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
இறப்பு விகிதம் பயத்தை ஏற்படுத்துகிறது மற்றும் நிலைமை கையை மீறி செல்கிறது.
நான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் தொடர்ந்து கலந்தாலோசிக்கிறேன்.
We have reached full capacity of 1000 beds which include 450 oxygen beds
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 12, 2021
Current required bed capacity for Dharmapuri is 10,000 beds at make shift places
Doctors and frontline warriors are of shortage and existing staff are already stressed out
Immediate action required
2/2
450 ஆக்ஸிஜன் படுக்கைகள் அடங்கிய 1000 படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தர்மபுரிக்கு தற்போது 10,000 படுக்கைகள் தேவை.
மருத்துவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மற்றும் ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்கள் கடும் மனஅழுத்தத்தில் உள்ளனர். உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார்.