டோனியிடம் இருந்து நான் கற்று கொண்ட மிகப் பெரிய விஷயம் இது தான்! கேப்டனின் வெற்றி ரகசியத்தை கூறிய பாண்ட்
டெல்லி அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் ரிஷப் பாண்ட் தன்னுடைய அந்த வெற்றியின் ரகசியம் குறித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடர் என்றாலே பலம் வாய்ந்த அணிகளாக முதலில் பலரின் மனதில் ஞாபத்திற்கு வருவது, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான், அதன் பின்பு தான் ஹைதராபாத், பெங்களூரு போன்ற அணிகளை சொல்வோம்.
ஆனால், இந்த முறை ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில், டெல்லி அணி பட்டையை கிளப்பி வருகிறது. நேற்றைய ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அந்தணியின் கேப்டன் ஆன, ரிஷப் பாண்ட் தான், ஷ்ரேயஸ் அய்யர் காயம் காரணமாக முதல் பாதியில் விலகியிருந்த நிலையில், தற்போது அந்த அணியை ரிஷப் பாண்ட் வழி நடத்தி வருகிறார்.
இப்போது ஷ்ரேயஸ் அய்யர் திரும்பிய பின்பு கூட, ரிஷப் பாண்ட் அணியின் கேப்டன் ஆக உள்ளார். இந்நிலையில், இது குறித்து நேற்றைய போட்டி முடிந்த பின்பு கூறுகையில், கேப்டனாக நான் டோனியில் இருந்து மிகப் பெரிய விஷயங்களை கற்றுக் கொண்டதாக கூறினார்.
கற்றல் என்பது நாம் செயல்முறையில் கவனம் செலுத்துவது தான், அப்படி நாம் அதை சரியாக கவனம் செலுத்தும் போது, முடிவுகள் தானாகவே வரும். அது தான் நான் இப்போது நீண்டகாலமாக பின்பற்றி வரும் மிகப் பெரிய மந்திரங்களில் ஒன்று என கூறியுள்ளார்.
மேலும், அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.
உங்களை சுற்றியுள்ள வீரர்களை நீங்கள் சிறப்பாக மதிக்கும் போது, அவர்கள் உங்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள், அதற்கான மதிப்பு உங்களுக்கு கிடைக்கும், இதை ரிக்கிபாண்டிங்கிடம் இருந்த கற்றுக் கொண்டதாக குறிப்பிட்டார்.