தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ள டோனி! இப்படி செய்யலாமா என ஆதங்கம்
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் மேற்கொண்டுள்ள ஒரு விடயம் தமிழக ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
டோனியின் பிறந்த ஊர் ராஞ்சியாக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவே விளங்கியவர். சென்னை தான் தமது இரண்டாவது வீடு என்றே டோனி பலமுறை கூறியுள்ளார்.
தனது கடைசி ஐ.பி.எல். போட்டியும் சென்னையில் தான் விளையாடுவேன் என்று கூறினார். ஆனால் தற்போது டோனி எடுத்த முடிவு சென்னை ரசிகர்களை கொஞ்சம் அசைத்து தான் பார்த்துள்ளது.
டோனி நண்பர் மிஹிர் திவாகர், டோனியின் பெயரில் ஒரு கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார். இந்த அகாடமியின் மெண்டராக உள்ள டோனி , நேரடியாக எவ்வித நிர்வாக பொறுப்பிலும் இல்லை.
ஆனால் தோனி இதில் கொஞ்சம் முதலீடு செய்துள்ளார். இந்த அகாடமி அகமதாபாத், கான்பூர், நொய்டா, டெல்லி, ராய்ப்பூர்,ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ளது.
இந்த நிலையில், டோனி கிரிக்கெட் அகாடமியின் 7வது கிளை பெங்களூருவில் தொடங்கப்பட உள்ளது. வரும் 15ஆம் திகதி முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த அகாடமியில், 5 பயிற்சி ஆடுகளம், மைதானத்தின் நடுவில் 5 ஆடுகளம், 70 மீட்டர் சுற்றளவை கொண்ட மைதானம் என பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்த அகாடமி இதுவரை சென்னையில் இல்லாதது தமிழக ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. தமிழக ரசிகர்கள் இதன் மூலம் பயன் அடையலாம். ஆனால் டோனி ஏன் இதை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.