டோனியை எப்படி ஏலத்தில் எடுத்தோம்? முதலமைச்சர் பாராட்டு விழாவில் பல உண்மைகளை கூறிய ஸ்ரீனிவாசன்
ஐபிஎல் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் அணியின், உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணி, கோப்பையை வென்று அசத்தியது.
கடந்த ஆண்டு லீக் தொடரில் வெளியேறிய சென்னை அணி, இந்த முறை கோப்பையோடு ஊர் திரும்பியுள்ளதால், சென்னை அணிக்கு தமிழக முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் படி நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன், ஐ.பி.எல். முதல் சீசனுக்கான ஏலம் நடைபெற்ற போது, பலமான அணியையும், நல்ல தலைவனையும் உருவாக்க விரும்பினேன்.
இதற்காக ஏலத்தை கவனித்து கொண்டிந்த முன்னாள் வீரர் சந்திரேசகரை அழைத்து, நீங்க என்ன செய்வீங்கனு தெரியாது, எனக்கு டோனியை நம்ம அணியில் எடுத்தே ஆகனும் என்று கூறினேன்.
அதன் பின் அணிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற போது, ஸ்ரீகாந்த் குலுக்கல் முறையில் சீட்டை எழுதிப் போட்டார். அதில் பல முறை சென்னை சூப்பர் கிங்ஸ் பெயர் வந்ததால், அந்த பெயரை வைத்துவிட்டோம். செய்யாத தப்பிற்கு எங்கள் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
அந்த தடைக்கு பின் வீரர்கள் அனைவரும் சந்தித்து கொள்ளும் வகையில், ஒரு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது தான் டோனி முதல் முறையாக கண்கலங்கி பேசியதைப் பார்த்தேன்.
அப்போது அவர் அந்த ஆண்டு சென்னை கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறினார். அதே போன்று செய்தும் காட்டியதாக கூறினார்.