CSK-வுக்கு டோனி கொடுத்த சூப்பர் ஐடியா! தக்க வைக்கப்படும் வீரர்கள் விஷயத்தில் கசிந்த தகவல்
சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் விஷயத்தில், சென்னை அணி நிர்வாகத்திற்கு டோனி வைத்த வேண்டுகோள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக 10 அணிகளுடன் நடைபெறவுள்ளது. இதற்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது.
இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்கள் 4 பேரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வீரர்கள் அறிவிக்கும், கடைசி நாள் வரும் 30-ஆம் திகதி என்பதால், அதற்கு ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
அதன் படி சென்னை அணி நிச்சயமாக டோனியை தக்க வைக்கும் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது. இருப்பினும் டோனி இந்த விஷயத்தில் அணி நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிசிசிஐ வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி, ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் முதல் நபராக தக்கவைக்கும் வீரருக்கு 16 கோடி ரூபாயும், இரண்டாவது நபராக தக்க வைக்கப்படும் வீரருக்கு 12 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 8 கோடி மற்றும் நான்காவது வீரருக்கு 6 கோடி ரூபாயும் விலையாக நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் டோனி இந்த விஷயத்தில் தன்னை நான்காவது வீரராக எடுத்துக் கொள்ளும் படி கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த சென்னை ரசிகர்கள் டோனி நெகிழ்ந்து போயுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில், டோனி இந்திய அணி ஆலோசகராக இருந்தார்.
அதற்கு அவர் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.