நான் தரையில் படுத்து கொள்கிறேன்! கவலை படாதீங்க... தவித்த இந்திய இளம் வீரருக்காக டோனி அன்புடன் செய்த உதவி
இந்திய அணியின் இளம் வீரர் ஒருவருக்காக டோனி 2 ஆண்டுகளுக்காக முன்னர் செய்த நெகிழ்ச்சி செயல் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்காகத்தான் தனது படுக்கையை தியாகம் செய்வதற்கு டோனி தயாராக இருந்த தகவல் தான் அது.
உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வாகியுள்ளார். அந்த அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் ஹர்திக் பாண்டியா இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
கடைசி நேரத்தில் இந்திய அணியுடன் இணைந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எனக்கு தங்குவதற்கு ஹொட்டலில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை, இதனால் நான் தவித்தபடி இருந்தேன். இதுகுறித்து அறிந்ததும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டது டோனி தான்.
நான் படுக்கையில் படுப்பது கிடையாது எனவே நீங்கள் வந்து எனது படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். நான் தரையில் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் அணிக்காக விளையாட வந்தால் மட்டும் போதும். வேறு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், என்று அவர் அன்போடு அழைத்தார்.
அணியிலேயே மூத்த வீரர் டோனி. அப்படி இருந்தும் ஒரு இளம் வீரரான எனக்கு படுப்பதற்கு படுக்கையை தருவதாகவும் அவர் கீழே படுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஆரம்ப காலம் முதலே எனது செயல்பாடுகள் எப்படி எனது திறமையை எப்படி என்பது பற்றி முழு அளவில் தெரிந்து வைத்திருந்தவர் டோனி, ஒவ்வொரு வீரரை பற்றியும் அவருக்கு மிக நன்கு தெரியும் என கூறியுள்ளார்.