நான் செய்தது தான் தவறு... டோனி அந்த விருதுக்கு தகுதியானவர்! பல ஆண்டுக்கு பின் பேசிய இயான் பெல்
இங்கிலாந்து அணி வீரரான, இயான் பெல் இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது ரன் அவுட் ஆகி, மீண்டும் விளையாட வந்தது குறித்து பேசியுள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு, இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், தேனீர் இடைவெளிக்கு முன் சிறப்பாக விளையாடி வந்த இங்கிலாந்து வீரர் இயான் பெல் 137 ஓட்டங்கள் எடுத்த போது, ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ஆனால், தேனீர் இடைவெளிக்கு பின் மீண்டும், இயான் பெல் வந்து பேட்டிங் செய்தார். இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் பவுண்டரி சென்றுவிட்டதாக கூறி, இயான் பெல் அந்த பந்தை அடித்துவிட்டு, ரன் ஓடாமல் சாதரணமாக வந்தார்.
அப்போது அங்கிருந்த பீல்டர் பந்தை பிடித்து வீச, டோனி சாதரணமாக ஸ்டம்பை அடித்து ரன் அவுட் கேட்டார். அதே போன்று மூன்றாவது நடுவர் செக் செய்து பார்த்த போது, அது பவுண்டரி இல்லை, பீல்டர் பந்தை தடுத்துவிட்டார், இது அவுட் என்று கூறப்பட்டது.
இயான் பெல்லின் துரதிர்ஷ்டவசமான இந்த அவுட்டை அறிந்த டோனி, அவரை மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுத்தார். இது குறித்து இங்கிலாந்து வீரர் இயான் பெல் இப்போது பேசியுள்ளார்.
அதில், அந்த சம்பவம் மிகுந்த சுவாரசியமான அனுபவமாக இருந்தது. பந்து பவுண்டரி லைனை கடந்திருக்கும் என கருதி நின்று விட்டேன். அதுமட்டுமின்றி நான் அப்போது பசியாக இருந்ததாகவும் நினைவு இதனால் பெவிலியனுக்கு திரும்புவதில் குறியாக இருந்தேன்.
நல்லவேளை தோனியின் பெருந்தன்மையால் நான் அந்த ரன்அவுட்டில் இருந்து தப்பித்தேன். அந்தப் போட்டியில் நான் செய்தது தவறு நான், அன்று நான் அப்படி செய்திருக்கக் கூடாது.
டோனியின் இந்த செயலுக்காக அவருக்கு ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட் அவார்ட் கிடைத்தது அந்த விருதுக்கு டோனி தகுதியானவர் தான் எனவும் இயான் பெல் கூறியுள்ளார்.