டோனிய திடீர்னு கேப்டனு சொல்லிட்டாங்க... நான் எனக்கு கிடைக்கும்னு நினைச்சேன்! பல உண்மைகளை உடைத்த யுவராஜ் சிங்
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங், கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய அணியில் நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்திய அணிக்கு பல முக்கிய தொடர்கள் வெல்ல காரணமாக இருந்தவர் தான் அதிரடி மன்னன் யுவராஜ் சிங்.
முதல் முறையாக நடந்த டி20 உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கும், 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி வெல்வதற்கும், அதன் பின் சாம்பியன்ஸ் டிராபி என இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடித் தந்த முக்கியமான வீரர் யுவராஜ் சிங்.
இந்தியாவிற்காக பல ஆண்டுகள் விளையாடினாலும், சிறப்பான ஆட்டத்தை கொடுத்தாலும், யுவராஜ் சிங்க்கிற்கு கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் யுவராஜ் கூறுகையில், கடந்த 2007-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி தோற்ற போது நாங்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தோம். அணியில் இருந்த அனைத்து வீரர்களும் மிக மன உளைச்சலுக்கு ஆளாகி அணியே சற்று சோகமான சூழ்நிலையில் இருந்தது.
அந்த கால கட்டங்களில் இந்திய அணிக்குள் நிறைய குழப்பங்கள் இருந்தது. 50 ஓவர் உலகக் கோப்பை முடிந்த பிறகு இரண்டு மாத கால சுற்றுப்பயணங்களில் இங்கிலாந்து பயணம் மற்றும் தென் ஆப்பிரிக்க, அயர்லாந்து என அடுத்தடுத்து தொடர்கள் இருந்ததால் நான்கு மாதங்களுக்கு இந்திய வீரர்கள் வெளிநாட்டு பயணத்தில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது.
அந்த காலகட்டத்தில் ஏற்கனவே அடைந்த தோல்வியால் சீனியர் வீரர்கள் இந்த பெரிய தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள நினைத்தார்கள். மேலும் அதே நேரத்தில் ஐசிசி முதல்முறையாக நடந்தவிருந்த டி20 உலகக்கோப்பை தொடரும் எதிரில் வந்தது.
ஆனால், இந்த டி20 உலககோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வேளையில் எனக்கு நிச்சயம் இந்திய அணியின் டி20 உலக கோப்பை தொடரின் கேப்டன் பதவி கிடைக்கும் என்று நான் மிகவும் எதிர்பார்த்தேன்.
ஆனால் இறுதியில் என் பெயர் அறிவிக்கப்படாமல் டோனியின் பெயர் கேப்டனாக அறிவிக்கப்பட்டது. எனது கேப்டன் பதவி பறிபோனது எல்லாம் கவலை இல்லை.
யார் கேப்டனாக இருந்தாலும் நான் 100 சதவீதம், இந்திய அணிக்காக எனது பங்களிப்பை அளிப்பதில் உறுதியாக இருந்தேன். அதையே செய்தேன் என்று கூறியுள்ளார்.