தன்னை பார்க்க நடந்தே வந்த ரசிகருக்கு டோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்
இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனி, தன்னைப் பார்க்க வந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சிக்கு அளிக்கும்விதமாக அவருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள கெடா என்கிற கிராமத்தைச் சேர்ந்த டோனியின் தீவிர ரசிகர் ஒருவர் டோனியைப் பார்ப்பதற்காக, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வரை நடைபயணமாக 1436 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றுள்ளார்.
இவர் ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு டோனியை பார்க்க சென்றுள்ளார். ஆனால், அந்த சமயத்தில் டோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவத்ற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார்.
இதனால் அவர் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். இந்நிலையில், டோனி தற்போது இந்தியா திரும்பியுள்ளதால், இந்த விஷயத்தை கேள்விட்டு, உடனே அந்த ரசிகரை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு அழைத்து, நன்றாக சாப்பிடவிட்டு, அதன் பின் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, விமானம் மூலம் அவரை வழி அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்த அந்த இளைஞன் கூறுகையில், கிரிக்கெட் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்று இருந்த நான் டோனி ஓய்வுக்கு பின் அதையே மறந்துவிட்டதாகவும், தற்போது டோனியை பார்த்த பின்பு, மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.