இது மட்டும் நடந்திருந்தா கொல்கத்தா ஜெயித்திருக்கும்! வெற்றிக்கு பின் டோனி ஓபன் டாக்
கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றி குறித்து சென்னை அணியின் தலைவரான டோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, பரபரப்பான இப்போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
இது குறித்து சென்னை அணியின் தலைவரான டோனி கூறுகையில், நடைபெற்று முடிந்த ஒரு இலகுவான போட்டி என்றே கூறலாம், ஆட்டத்தின் 16-வது ஓவரில் இருந்தே, போட்டி எதிரணி பேட்ஸ்மேன்களுக்குமாக மாறியது.
அதில் நாம் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. பெரிதாக பீல்டிங்கில் கூட மாற்றம் செய்ய முடியாது. எந்த அணி தங்களது திட்டங்களை எதிரணியை விட சற்று அதிகமாக சரியாக செய்கிறதோ அந்த அணிக்கு தான் வெற்றி. கொல்கத்தா அணியிடம் கடைசி நேரத்தில் இன்னும் கூடுதலாக விக்கெட் கைவசம் இருந்திருந்தால் இந்த போட்டியின் முடிவு கூட மாறியிருக்கும்.
கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்துவிட்டோம் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்று இல்லை.
இறுதி வரை தன்னடக்கத்துடன் விளையாட வேண்டும். நம்மால் அடிக்க முடிந்த ரன்களை எதிரணியால் எப்படி அடிக்க முடியாமல் போய்விடும். இறுதி வரை தன்னடக்கத்துடன் விளையாட வேண்டும் என்பதை எனது வீரர்களிடம் சொல்லி கொண்டே இருப்பேன்.
விரைவாக விக்கெட்டுகளை கைப்பற்றுவதை தவிர எங்களிடம் வேறு திட்டம் எதுவும் பெரிதாக இல்லை. ருத்துராஜ் கெய்க்வாட் மிக சிறப்பாக விளையாடினார்.
கடந்த போட்டிகளில் சொதப்பி இருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வைத்தே இந்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம், அவரும் தனது வேலையை மிக சிறப்பாக செய்துவிட்டார் என்று புகழ்ந்து கூறினார்.