டோனி இந்த தப்பை மீண்டும் செய்தால்...இது தான் நிலை! வெளியான தகவல்
சென்னை அணியின் தலைவரான டோனி, போட்டியின் போது இனி சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டால், அவர் போட்டியில் விளையாடமல் கூட போகலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், முதல் போட்டியில் டெல்லி அணியுடன் தோல்வி பெற்ற சென்னை அணி அதனுடைய 2-வது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆனால், முதல் போட்டியில் டோனி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்டத்தை முடிக்காமல், சற்று அதிகமான நேரம் எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இரண்டு போட்டிகளுக்கு அதே போல் செய்தால் நிச்சயமாக தோனி விளையாட முடியாமல் போகும் அதாவது, முதல் போட்டியில் தாமதித்த டோனி இரண்டாவது போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் விளையாட்டை நடத்தி முடித்தார்.
இருப்பினும், இதேபோல் இன்னும் இரண்டு போட்டிகளில் இவ்வாறு தாமதமாக ஆடினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதம் அதிக படுத்தப்படும்.
அதுவே, இரண்டு போட்டிகளுக்கு மேல் மூன்றாவது போட்டியில் அவர் தாமதிக்கும் பட்சத்தில் நிச்சயமாக போட்டு விளையாட முடியாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது.