நான் சந்திக்கும் முதல் 6 பந்துகள்... இனி அப்படி செய்யமாட்டேன்! முதன் முறையாக மனம் திறந்த டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி தன்னுடைய பேட்டிங் குறித்து முதன் முறையாக பேசியுள்ளார்.
இந்திய அணிக்கு பல வெற்றிகளையும், மூன்று வித கோப்பைகளையும் வாங்கிக் கொடுத்து பெருமை சேர்த்தவர் தான் டோனி. இருப்பினும் கடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பின் விளையாடமலே இருந்த டோனி திடீரென்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதையடுத்து தற்போது நடைபெற்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக விளையாடி வரும் டோனி, நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பின் பேசுகையில், நான் சந்திக்கும் முதல் 6 பந்துகளால் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும்.'
மேலும் சொல்லப்போனால் அது தோல்விக்கு கூட வழிவகை செய்யும். இனி வரும் போட்டிகளில் அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நான் என்னுடைய அணிக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்ய விரும்புகிறேன்.
24 வயதில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று எந்த உறுதியும் அளிக்கவில்லை. அதேபோல்தான் இப்போது 40 வயதாகும் போதும் என்னால் எந்த உறுதியும் அளிக்க இயலாது.
ஆனால் குறைந்தபட்சம், மற்றவர்கள் என்னை பார்த்து நீ விளையாடுவதற்கு தகுதியில்லாதவன் என்று கைகாட்டாமல் இருப்பதே எனக்கு மிகப் பெரிய பாஸிட்டிவ் என்றும் கூறினார்.