ஆர்.சி.பி அணியை விளாசி தள்ளி சென்னை அணி ஜெயிக்க இவர் தான் காரணம்! பெருமிதத்தோடு புகழ்ந்து பேசிய தோனி
ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் அது குறித்து கேப்டன் தோனி பேசியுள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சென்னை அணியின் இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் தோனி, டூவைன் பிராவோவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், போட்டியின் 8வது ஓவரில் ஆடுகளம் மந்தமாக மாறிவிட்டது. ஜடேஜா மிக சிறப்பாக பந்துவீசினார், குறிப்பாக படிக்கல் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஜடேஜாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
மொய்ன் அலிக்கும் ஓவர் கொடுக்க வேண்டும் என நினைத்தேன், இதை அவரிடம் கூறிவிட்டேன் ஆனால் திடீரென எனது முடிவை மாற்றி கொண்டு பிராவோவிடம் ஓவர் கொடுக்க தீர்மானித்தேன். பிராவோ மிக சிறப்பான பந்துவீச்சாளர், ஸ்லோ பந்துகள் வீசுவதில் பிராவோ கெட்டிக்காரர்.
பிராவோ தனது வேலையை மிக சரியாக செய்து கொடுத்தார். பிராவோ எனது சகோதரர் அவரை அப்படி தான் அழைப்பேன். பிராவோ பந்துவீசும் போது ஓவரின் 6 பந்துகளிலும் 6 விதமான பந்துகள் வீச சொல்வேன், வெற்றியில் அவர் பங்கு மிக முக்கியம் என கூறியுள்ளார்.