நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை! சென்னையை இறுதி போட்டிக்குள் அழைத்து சென்றும் தலைக்கனம் இல்லாமல் பேசிய தல டோனி
ஐபிஎல் 2021ல் சென்னை அணி இறுதி போட்டிக்குள் நுழைய முக்கிய காரணமாக மாறியுள்ள டோனி, அணியின் வெற்றிக்கு பின்னர் பேசியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ப்ளே ஆப் போட்டியில் டெல்லி அணியை சென்னை அணி வீழ்த்தியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் டோனியிடமிருந்து ஒரு அருமையான கடைசி ஓவர் பினிஷிங்கை நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராகப் பார்த்துள்ளனர்.
இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு டோனி தனது பேட்டிங் மூலம் பதில் கொடுத்திருக்கிறார், இதோடு தனது சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் சென்னை அணியை இறுதி போட்டிக்குள் அழைத்து சென்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து டோனி கூறுகையில், என்னுடைய இன்னிங்ஸ் முக்கியமானது. டெல்லியிடம் நல்ல பவுலிங் அட்டாக் உள்ளது.
அவர்கள் பிட்ச் உள்ளிட்டவற்றை நன்றாகப் பயன்படுத்தினார்கள். எனவே எங்களுக்குக் கடினம் என்று நினைத்தோம். இந்தத் தொடரில் நான் பெரிதாக எதையும் செய்து விடவில்லை.
எனவே பந்தை பார்க்க வேண்டும், பவுலர் என்ன செய்கிறார் என்பதை கவனித்தேன். வலைப்பயிற்சிகளில் நான் நன்றாகவே பேட் செய்தேன். ஆனால் நான் நிறைய யோசிப்பதில்லை, ஏனெனில் ரொம்ப யோசித்தால் பேட்டிங்கில் திட்டங்களை குழப்பிக் கொள்வதில் போய் முடியும்.
ஷர்துல் டீசண்டாக பேட் செய்கிறார், தீபக் சாகரும்தான். மற்ற டாப் ஆர்டர் பேட்டர்களைப் போல் அல்லாமல் ஷர்துல், சாகருக்கு முதல் பந்திலிருந்தே ஷாட்களை ஆட அனுமதியுண்டு. ராபின் உத்தப்பா டாப் ஆர்டர் பேட்டிங்கை எஞ்ஜாய் செய்கிறார்.
ஆனால் நம்பர் 3-ல் மொயின் அலி எக்செலண்ட். இருவரில் ஒருவர் 3ம் நிலையில் இறங்குமாறு சூழ்நிலை ஏற்படுத்தினோம்.
நானும் ருதுராஜும் எப்போது பேசினாலும் அது ஒரு எளிமையான பேச்சாகவே இருக்கும். அவர் என்ன யோசிக்கிறார் என்பதை அறிய முயற்சி செய்வோம். அவர் எப்படி முன்னேறியிருக்கிறார் என்பதை பார்க்க நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார்.