GCC தடை காரணமாக துரந்தர்-2 திரைப்படம் ரூ.100 கோடி இழப்பு
GCC தடை காரணமாக துரந்தர்-2 திரைப்படம் ரூ.100 கோடி வரையிலான லாபத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரன்வீர் சிங் நடித்து வெளியாகியுள்ள 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' திரைப்படம் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், வளைகுடா நாடுகள் (UAE, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன்) இந்த படத்தை தடை செய்துள்ளன.
இந்த தடை, படத்தின் உலகளாவிய வசூலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என வணிக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

துரந்தர் முதல் பாகம் வெளியானபோது, வளைகுடா நாடுகளில் திரையிடப்படாததால் சுமார் 50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இப்போது, இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படுவதால், இழப்பு ரூ.75 முதல் 100 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
திரைப்பட வணிக நிபுணர் கிரிஷ் ஜோஹர், “வளைகுடா தடை மற்றும் நடந்து வரும் ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் காரணமாக 20 முதல் 30 சதவீத வசூல் குறையலாம்” என தெரிவித்துள்ளார்.
அதேசமயம், OTT ஒப்பந்தம் இன்னும் உறுதி செய்யப்படாததால், படத்தின் முதலீடு மீட்பு சற்று சிக்கலாக இருக்கலாம்.
ஆனால், பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ், “படம் வளைகுடாவில் வெளியிட விண்ணப்பிக்கவே இல்லை. எனவே, வணிகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது” எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு, துரந்தர் 2 திரைப்படம் உலகளாவிய வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், வளைகுடா தடை அதன் வசூல் சாதனைகளை சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |