டயானா இறப்பதற்கு முன் கடைசியாக என்னிடம் இதைத் தான் சொன்னார்! முதன் முறையாக பகிர்ந்த அவரின் நண்பர்!
இளவரசி டயானா இறப்பதற்கு கடைசியாக பேசியது குறித்து அவரது நண்பர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 1997-ஆம் ஆண்டு காரில் சென்ற டயானா, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆனால் இன்று வரை அவரின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு தான் வருகின்றன.
அவர் உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அவர் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், டயானா உயிரிழப்பதற்கு முன், அதாவது கடைசியாக டயானாவிடம் Richard Kay என்பவர் தொலைப்பேசியில் பேசியிருந்ததாக பொலிசார் கூறியிருந்தனர்.
இதையடுத்து தற்போது Richard Kay இது குறித்து பேசியுள்ளார். அதில், அன்றைய தினம் இரவு நான் டயானாவிடம் பேசினேன். அப்போது அவர் தான் ஒரு நல்ல இடத்தில் இருப்பதாக உணர்வதாகவும், தன்னுடைய வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளதாகவும் கூறினார்.
மேலும், டயானான , திரும்பி வந்து தன் இரு மகன்களையும் பார்க்க ஆவலுடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். டயானா தொடர்பான ஆவணப்படம் ஐடிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இது வரும் ஜுன் 24-ஆம் திகதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக டயான கடைசியாக தொலைப்பேசியில் பேசிய விவரங்கள் குறித்து இவர் கூறியுள்ளார். .
வரும் ஜுலை 1-ஆம் திகதி டயானாவின் 60-வது பிறந்த நாள் வருவதால், அதை முன்னிட்டு இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி, அன்றைய டயானாவின் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரும் ஒன்றாக வந்து டயானாவின் சிலை ஒன்றை திறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சிலை டயானாவின் விருப்பமான இடங்களில் ஒன்றான கென்சிங்டன் அரண்மனையின் சுங்கன் கார்டனில் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.