கொல்லப்படும் முன் காதலருடன் நிச்சயதார்த்தத்தை அறிவிக்க இருந்த டயானா: கோடீஸ்வரர் வெளியிட்ட தகவல்
இளவரசி டயானாவும் அவரது காதலரும் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவிக்க இருந்த நிலையில், கார் விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார் டயானாவின் காதலரான டோடி ஃபயத்தின் தந்தை.
டயானாவின் இறுதி நாட்கள்
1990களில் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக அறியப்பட்டவர் மொஹமத் அல் ஃபயத்.
பிரித்தானிய இளவரசி டயானா கொல்லப்படுவதற்கு முன் இந்த மொஹமதின் மகனான டோடியைத்தான் காதலித்தார். இருவரும் சேர்ந்து சுற்றுலா சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ஒரு காலம்.
Image: PA
ராஜ குடும்பம் அந்த அவமானத்தில் புழுங்கிக்கொண்டிருந்தபோதுதான், பாரீஸில் நடந்த விபத்தில் டயானாவும் அவரது காதலரும் கொல்லப்பட்டார்கள். ஆனால், சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட இருந்ததாகவும், அதற்குள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் டோடியின் தந்தையான மொஹமத்.
அது விபத்து அல்ல, கொலை என மொஹமத் உட்பட பலரும் குற்றம் சாட்டியிருந்தார்கள்.
மொஹமதின் தற்போதைய நிலை
பெரும் செல்வந்தரான மொஹமத், தன் மகன் இறந்த பிறகு தனது சொத்துக்கள் பலவற்றை விற்றுவிட்டார். தன் மகனும் இளவரசி டயானாவும் கொல்லப்படுவதற்கு முன் கடைசியாக தங்கியிருந்த பிரபல Ritz Paris Hotel என்னும் ஹொட்டலை மட்டும் அவர் விற்காமல் வைத்திருக்கிறார்.
Image: Rex Features
அத்துடன், தன் மகனும் இளவரசி டாயானாவும் கடைசியாக தங்கிய லண்டனிலுள்ள தனது மகன் டோடியின் வீட்டையும் அப்படியே வைத்திருக்கிறாராம் டோடி. அந்த வீடு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டாலும், அதிலுள்ள எந்த பொருட்களையும் இடம் மாற்றக்கூடாது, தன் மகனும் டயானாவும் நேரம் செலவிட்ட அந்த வீடு அப்படியே இருக்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளாராம் அவர்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த வீட்டுக்குச் சென்று நேரம் செலவிடுவாராம் மொஹமத்.
Image: Rex Features