இளவரசி டயானா இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்... மனம் திறக்கும் பாதுகாவலர்
இளவரசி டயானாவுடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் தாமும் இருந்திருக்க வேண்டும்
அமெரிக்காவில் வாழ வேண்டும் என டயானா மிகவும் ஆசைப்பட்டார் - டயானாவின் நிறைவேறாத ஆசை
பிரித்தானியா இளவரசி டயானா, அன்புடன் ராம்போ என அழைக்கும் அவரது பாதுகாவலர் நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் மனம் திறந்துள்ளார்.
இளவரசி டயானா இறந்து நீண்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர் Lee Sansum என்ற அவரது முன்னாள் பாதுகாவலர் தெரிவிக்கையில், சம்பவத்தன்று தாம் பணியில் இருந்திருந்தால் தற்போதும் டயானா உயிருடன் இருந்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
@Getty
தற்போது 60 வயதாகும் லீ சான்சும், இளவரசி டயானாவுடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் தாமும் இருந்திருக்க வேண்டும் எனவும், பிரான்சில் St Tropez பகுதியில் விடுமுறையை கழிக்க பாதுகாப்பு அளித்தமைக்கு, டயானா கைப்பட எழுதிய நன்றி கூறும் கடிதம் ஒரு பொக்கிஷமாக இன்னமும் பாதுகாத்து வருவதாகவும் லீ தெரிவித்துள்ளார்.
1997, ஆகஸ்டு மாதம் 31ம் திகதி பாரிஸ் நகரில் நடந்த அந்த விபத்திற்கு முன்னர், அவர்கள் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என அறிந்ததும், ஏன் அவர்கள் உயிர் தப்பவில்லை என்பதை புரிந்து கொண்டதாக லீ குறிப்பிட்டுள்ளார்.
அப்படியான ஒரு சூழல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் லீ மனம் திறந்துள்ளார். பொதுவாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டளை. அது டோடியின் தந்தை முகமது ஃபயத் என்பவரால் இடப்பட்டுள்ள கட்டளை, அதனாலையே, மொத்த குடும்ப உறுப்பினர்களும் தவறாமல் பின்பற்றி வந்துள்ளனர்.
ஆனால் டோடி மட்டும் ஒருபோதும் அதை பின்பற்றுவதில்லை எனவும் லீ தெரிவித்துள்ளார். முகமது ஃபயத் குடும்பத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள லீ, டாம் குரூஸ், நிக்கோல் கிட்மேன், சில்வெஸ்டர் ஸ்டலோன் மற்றும் கால்பந்து வீரர் பீலே ஆகியோருக்கும் பாதுகாப்பு அளித்துள்ளார்.
இளவரசி டயானாவுடன் டோடி பழகத்தொடங்கிய நாட்களில் அவர்களின் சிறப்பு பாதுகாப்பு பணியில் லீ பொறுப்பேற்றுள்ளார். ஒரு நாளில் தாம் கொல்லப்படும் வாய்ப்புகள் அதிகம் என டயானா நம்பி வந்துள்ளதையும் லீ குறிப்பிட்டுள்ளார்.
@ardex
டோடியுடன் அமெரிக்காவில் வாழ வேண்டும் என டயானா மிகவும் ஆசைப்பட்டதாகவும், அமெரிக்காவில் அவர்களின் பாதுகாப்பு பணியில் தம்மை பணியமர்த்தியதாகவும் லீ தெரிவித்துள்ளார்.
டயானாவின் அந்த நிறைவேறாத ஆசை தான், தற்போது ஹரியும் மேகனும் அமெரிக்காவில் குடியேற காரணமாக அமைந்திருக்கலாம் என லீ நம்புகிறார்.