தகிக்கும் வெப்ப அலை... பிரித்தானியாவில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை
பிரித்தானியாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 15 வயது சிறுவன் உட்பட 16 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் வெப்பநிலை 32C என பதிவாகி வரும் நிலையில், மக்கள் ஏரிகள் மற்றும் கடற்கரை நோக்கி படையெடுக்கின்றனர்.
வெப்ப அலை காரணமாக ஏரி மற்றும் கடலில் குளிக்கும் மக்கள் உயிர் அபாயம் ஏற்படாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெர்பிஷயரில் அமைந்துள்ள Trent நதியில் செவ்வாய்க்கிழமை சுமார் 11.30 மணியளவில் இளவயது சிறுவன் ஒருவனை சடலமாக மீட்டுள்ளனர்.
அதே நாளில் மதியத்திற்கு மேல் Stanborough ஏரியில் ஆண் ஒருவரை சடலமாக மீட்டுள்ளனர். மட்டுமின்றி Crosby கடற்கரையில் 20 வயது கடந்த ஒரு இளைஞரை சடலமாக மீட்டுள்ளனர்.
மேற்கு யார்க்ஷயரில் அமைந்துள்ள நாட்டிங்லி மற்றும் Goole கால்வாயில் குதித்த 15 வயது சிறுவனின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.