இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய இலங்கை கேப்டன்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே அரைசதம் விளாசினார்.
வெல்லிங்டன் டெஸ்ட்
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. நேற்றைய ஸ்கோர் 26-2 உடன் களமிறங்கிய இலங்கை அணி 164 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பொறுப்புடன் இறுதிவரை போராடிய இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே 89 ஓட்டங்கள் விளாசினார். இலங்கை அணி பாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஒஷாட பெர்னாண்டோ 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கருணரத்னே 34வது அரைசதம்
அதன் பின்னர் திமுத் கருணரத்னே - குசால் மெண்டிஸ் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் கருணரத்னே தனது 34வது அரைசதத்தை பதிவு செய்தார்.
Second fifty of this Test match for Dimuth Karunaratne!#NZvSL pic.twitter.com/3gymrmZnKd
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) March 19, 2023
மொத்தம் 83 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மெண்டிஸ் அரை சதம் அடித்தார்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மெண்டிஸ் 50 ஓட்டங்களுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளது. இலங்கை அணிக்கு இன்னும் 303 ஓட்டங்கள் தேவை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.