பாரம்பரியமான திண்டுக்கல் சீரக சம்பா சிக்கன் பிரியாணி: எப்படி செய்வது?
திண்டுக்கல் சீரக சம்பா சிக்கன் பிரியாணி என்றாலே அதன் தனித்துவமான சுவை சாப்பிட்டால் அப்படியே நாக்கிலே தங்கிவிடும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு சுவையான மட்டன் பிரியாணி.
பாரம்பரியமான முறையில் நாவூறும் சுவையில் வீட்டிலேயே திண்டுக்கல் சீரக சம்பா சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி- 1 Kg
- சிக்கன்- 2kg
- கடலை எண்ணெய்- 100g
- நெய்- 100g
- பட்டை- 10g
- ஏலக்காய்- 5g
- கிராம்பு- 3g
- அன்னாசி பூ- 3g
- பச்சை மிளகாய்- 6
- தயிர்- 50g
- வெங்காயம்- 100g
- கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி
- புதினா இலை -1 கைப்பிடி
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 60g
- பூண்டு- 5g
- எலுமிச்சை- ½
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் அதில் 1 துண்டு பட்டை, 3 ஏலக்காய், 3 கிராம்பு சேர்த்து சூடாக்கவும்.
பின் இதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பச்சைமிளகாய், நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போதும் வரை வதக்கவும்.
இதனைத்தொடர்ந்து இதில் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி பின் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கியபின் சிக்கன், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதன் பின் ஒரு கப் சீரக சம்பா அரிசிக்கு 2 கப் அளவு தண்ணீர் எடுத்து சிக்கனில் சேர்த்து அதன் பின் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிடவும்.
அடுத்து கழுவி 20 நிமிடம் ஊறவைத்த அரிசியை இதில் சேர்த்து வேகவைக்கவும்.
அரிசி 90% அரிசி வெந்ததும் இதனை 20 நிமிடம் தம் போட்டு இறக்கி கிளறினால் சுவையான திண்டுக்கல் சீரக சம்பா சிக்கன் பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |