என்னால முடியாம போச்சே! மும்பை தோல்விக்கு பின் கோபத்தில் தமிழன் தினேஷ் கார்த்திக் செய்த செயல்
மும்பை அணிக்கெதிரான போட்டியில், பேட்டிங்கில் சொதப்பியதால் தினேஷ் கார்த்திக் ஆத்திரத்தில் தன்னுடைய பேட்டை தூக்கி எறிந்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் வெறும் 152 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
ஆனால், அதை எட்டமுடியாமல் கொல்கத்தா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடை சந்திதது.
இந்தபோட்டியில் 15 ஓவர்களுக்குள் கொல்கத்தா அணி 122 ஓட்டங்கள் குவித்து சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் அந்தணி வெறும் 30 ஓட்டங்கள் அடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது.
அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸல் இருந்தும் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது. பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் தேவைப்படும் நேரத்தில் இவர்கள் இருவரும் சிங்கிள் எடுத்து வந்தனர்.
தனக்கு மிகவும் பழக்கமான மைதானத்தில், இதுபோன்று மோசமாக விளையாடியதால் தினேஷ் கார்திக் களத்தில் பேட்டை கோபமாக தட்டினார். அதுமட்டுமின்றி பெவிலியன் சென்றதும் பேட்டை தூக்கி எரிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.