இந்திய வீரர்கள் நள்ளிரவு வரை தூங்கவே இல்லை! பதட்டமா இருந்தாங்க... இங்கிலாந்துடனான 5வது போட்டி ரத்தான சூழலில் ரகசியம் உடைத்த தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தூங்காமல் பதட்டத்தில் இருந்தார்கள் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடக்கவிருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது இந்த தொடரில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை உடன் இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அடுத்தடுத்து அணியின் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது.
ஆனாலும் இந்திய வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் நிலைமையை மேலும் கடினம் ஆக்காமல் இந்திய வீரர்களை தனிமைப்படுத்தி இந்த போட்டியையும் நிர்வாகம் ரத்து செய்தது.
இது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ஐந்தாவது போட்டிக்கு முந்தைய நாள் நள்ளிரவு வரையில் இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் தூங்கவே இல்லை. நான் பல வீரர்களிடம் பேசினேன். அவர்கள் போட்டிக்கு தயாராக இருக்க வேண்டுமா ? இல்லை என்ன நடக்கப்போகிறது ? என்று தெரியாமலேயே பதட்டத்தில் இருந்தனர்.
மேலும் மனரீதியாக அவர்களால் போட்டிக்கு தயார் படுத்திக்கொள்ள முடியவில்லை. போட்டியில் என்ன நடக்கும் என்பதை யோசித்து பெரும்பாலானோர் தூங்கவில்லை.
இருப்பினும் சரியான முடிவாக இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு வருத்தமான விடயமாக இருந்தாலும் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்க இது சரியான முடிவு என கூறியுள்ளார்.