கேப்டன் பதவியை இயான்மோர்கனிடம் வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் தெளிவான விளக்கம்
தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
இந்த தொடரில் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல், வெளியேறியது. குறிப்பாக இந்த தொடரின் பாதியிலே கொல்கத்தா அணியின் கேப்டன் ஆன, தினேஷ் கார்த்திக், தன்னுடைய கேப்டன் பதவியை இயான் மோர்கனுக்கு விட்டுக் கொடுத்தார்.
இருப்பினும் கொல்கத்தா அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இந்நிலையில், கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்தது ஏன் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆண்டு நான் இயான் மோர்கன்னுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். 7 போட்டிகளில் விளையாடி முடித்து இருந்தாலும். அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற வைக்க எங்களிடம் மீதம் 7 போட்டி மட்டுமே இருந்தது.
அப்போது நான் அணியை மோசமாக வழி நடத்துகிறேன் என்று எனக்கு தெரிந்தது. மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்று நினைத்தேன்.
என்னைப் பொறுத்த வரை இது போன்ற செயல்கள் நியாயமற்றது. இரண்டரை ஆண்டுகளாக அணியை வழி நடத்தி இருக்கிறேன்.
என் மீது வீரர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இயான் மோர்கன் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர். இருவரும் சேர்ந்து அணியை சிறப்பாக வழிநடத்தவே இந்த முடிவினை எடுத்தாக கூறியுள்ளார்.