சர்ச்சையான கருத்துகள்: மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இயக்குனரகம்
சமூக வலைத்தளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதால், சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் கடிதம் அனுப்பியுள்ளது.
சித்த மருத்துவரின் ஆலோசனைகள்
சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதள ஊடகங்களில் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
பெண்கள் குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் உள்ளிட்ட சர்ச்சையான கருத்துக்களை அவர் கூறியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
விளக்க கடிதம்
இந்த நிலையில் இந்திய மருத்துவ இயக்குனரகம் விளக்கம் கேட்டு சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு தோன்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.