வெள்ளை சாதம் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
அரிசியினை முக்கிய உணவாக உணவு பட்டியலில் நாம் சேர்த்து கொண்டிருக்கின்றோம். தினமும் ஒரு வேளை அரிசி சாதம் உண்டால் உங்கள் உடலிற்கு நன்மை விளைவிக்கும்.
அதுவே மூன்று வேலையும் நீங்கள் அரிசி சாதம் உண்டு வந்தால் உங்கள் உடலிற்கு கேடு விளைவிக்கும்.
அதிகமாக அரிசியினால் ஆன வெள்ளை சாதத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பற்றி காண்போம்
உடல் எடை
அரிசியில் மற்ற தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை காட்டிலும் அதிக அளவில் கலோரிகள் நிறைந்துள்ளது.
இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது தேவையற்ற கலோரிகள் உடலில் கொழுப்பாக சேர்கின்றது. இப்படி சேரும் கொழுப்பினால் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
சர்க்கரை வியாதி
அரிசியானது அதிக அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உடையது. மற்றும் இதில் கோதுமை, ராகி, தினை, கம்பு, வரகு போன்ற தானியங்களை காட்டிலும் குறைந்த அளவு நார்சத்து உள்ளது.
அதனால் உங்கள் உடலில் மாவுச்சத்தானது அதிக அளவில் சேர்ந்து இரத்த சர்க்கரையின் அளவினை அதிகரிக்கும். இதன் விளைவே சர்க்கரை வியாதி ஆகும்.
இரத்த அழுத்தம் எனவே உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் அரிசி அதிக அளவில் எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளவும் நண்பர்களே.
இருதய கோளாறு
அரிசியினை நாம் உண்டு வரும்போது எரிக்கப்படாத கலோரிகள் நமது உடலில் கொழுப்பாக சேர்கின்றன. அவ்வாறு சேரும் கொழுப்பானது இருதய இரத்த நாளங்களில் சேர்கின்றது. இதன் விளைவாக உங்களுக்கு இரத்த அழுத்தம், இருதய கோளாறு, போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
குறைவான நார்சத்து
தோல் நீக்கப்பட்ட வெள்ளை அரிசியில் குறைந்த அளவே நார்ச்சத்து உள்ளது. நமது செரிமான ஆரோக்கியத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் மலச்சிக்கலை தடுக்கவும் நார்ச்சத்து மிக மிக முக்கியம்.
அதிக அளவில் வெள்ளை அரிசியினை உண்டு வந்தால் உங்களுக்கு நார்சத்து கிடைக்காது.