இளவரசி கேட் தொடர்பில் ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி
இளவரசர் வில்லியமுடன் தோளோடு தோளாக நின்று ராஜ குடும்ப கடமைகளை நிறைவேற்றுபவர் இளவரசி கேட் என்பதை உலகமே அறியும். ஆனால், அவர் தான் முன் செய்துவந்து பணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என வெளியாகியுள்ள தகவல் ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது.
மீண்டும் பணிக்குத் திரும்பாமலே போகலாம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இளவரசி கேட், அதிகாரப்பூர்வ பணிகளிலிருந்து விலகுவதாகவும், அதனால், எதிர்காலத்தில் அவர் மீண்டும் ஒரு பணி செய்யும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினராவாரா என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அரண்மனை வட்டாரத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு விடயங்களில் கவனம்
இளவரசி கேட், இப்போதைக்கு இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அது, தன் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவதும், தொண்டு நிறுவனங்கள் தொடர்பிலான பணிகளைத் தொடர்வதும் ஆகும்.
என்றாலும், கேட் மீண்டும் பணிக்குத் திரும்புவாரா, இந்த ஆண்டு மட்டும் பணியிலிருந்து ஓய்வெடுக்கிறாரா, அல்லது நிரந்தரமாகவே பணிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளாரா என்பது இப்போதைக்கு பதில் கூற இயலாத கேள்வி.
அவரது உடல் நலம், மருத்துவர்களின் ஆலோசனை, குடும்பச் சூழல் என பல்வேறு காரணிகள் அவர் பணிக்குத் திரும்புவதன் பின்னணியில் உள்ளன. என்றாலும், அவர் வெளியே வராமலே இருந்தால் அது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கக்கூடும், அதனால், அவரது உடல்நிலை குறித்து அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிடுவாரானால், அது தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க உதவும் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த நபர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |