வெறும் 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பு
குறைந்த விலையில், பதினைந்தே நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகளைத் தரும் கொரோனா அதிவேக கொரோனா சோதனை ஒன்றை ஸ்காட்லாந்து அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
கிளாஸ்கோவிலுள்ள Strathclyde பல்கலைக்கழக அறிவியலாளர்கள் குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பைச் செய்துள்ளது. நீரிழிவு பிரச்சினை கொண்டோர், உடனடியாக இரத்த சர்க்கரை கண்டறியும் சோதனை செய்வதற்காக பயன்படுத்தும் glucose test stripsஐ பார்த்துத்தான், தங்களுக்கு இந்த திட்டம் உதித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதுவும், இந்த சோதனைக்கு நோயாளியின் எச்சில் போதும். ஒரு துளி எச்சிலை இந்த சோதனை கிட்டில் வைத்து அதை ஒரு இயந்திரத்துக்குள் செலுத்தினால், பதினைந்தே நிமிடங்களில் ஒருவருக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
இந்த சோதனையின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், அதற்கான கட்டணம் வெறும் 16 செண்ட்கள்தான்! இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த சோதனை சந்தைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.