பிரித்தானிய நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்து என்ன?
பிரித்தானியாவில், ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரங்கள் செய்யப்படுவதற்கு வசதியாக பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
பிரித்தானிய நாடாளுமன்றம் கலைப்பு
பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஐந்து வார தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக துவங்கியதன் அடையாளமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் 650 இருக்கைகளும் மே மாதம் 30ஆம் திகதி, அதிகாலை, மணி 1.01க்கு (13.01), காலியாகின.
அடுத்து என்ன?
பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் கன்சர்வேட்டிவ் கட்சி பதவியிலிருந்த நிலையில், வரும் தேர்தலில் லேபர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரிஷி சுனக்குக்கோ எதிர்ப்பு துவங்கிவிட்டது எனலாம். 77 கன்சர்வேட்டிவ் கட்சியினர் உட்பட, 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர். அத்துடன், ரிஷி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும்போது மழை பெய்ததும் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்திலேயே, டைட்டானிக் கப்பல் கட்டப்பட்ட இடத்துக்கு ரிஷி செல்ல, அதுவும், டைட்டானிக் கப்பல் மூழ்கியதைப் போலவே அவரது தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மூழ்குவதற்கு ஒப்பாக பார்க்கப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் மற்றும் லேபர் கட்சிகள் மக்களைக் கவரும் வகையில் வாக்குறுதிகளை அளிக்கத் துவங்கியுள்ள நிலையில், மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, தேர்தல் முடிவுகள் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |