மருத்துவமனையிலிருக்கும் இளவரசி குறித்து வெளியாகியுள்ள கவலையளிக்கும் செய்தி
பிரித்தானிய மன்னர் சார்லசின் சகோதரியான இளவரசி ஆன், குதிரை ஒன்றால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்த, சற்றே கவலையளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
மருத்துவர்கள் தெரிவித்துள்ள கவலையளிக்கும் செய்தி
ஞாயிற்றுக்கிழமை மாலை, இளவரசி ஆன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஞாபக மறதி (memory loss) ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசி ஆனுக்கு என்ன நேர்ந்தது என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் விளக்கமளிக்காத நிலையில், அவர் குதிரையால் தலையில் தாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
அவர் தலையில் தாக்கப்பட்டதால் அவருக்கு concussion என்னும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த concussion என்பது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் மூளையில் ஏற்படும் லேசான காயமாகும்.
அதற்கேற்றாற்போல, தற்போது அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. என்றாலும், அது தற்காலிகமானது என்றே கருதப்படுகிறது.
இந்த வாரம் இளவரசி கனடாவுக்கு அரசுமுறைப்பயணமாக செல்ல இருந்தார்.
ஆனால், இந்த வாரம் முழுவதும் அவர் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளதால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |